சுபாஷ் சந்திரபோஸ் முதுகில் குத்திய ஆர்.எஸ்.எஸ்.

இந்துத்துவ வெறியும் சூழ்ச்சியும் பிணைந்து, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படைக்கு எதிராக, இந்துக்களை பிரிட்டிஷ் இராணுவத்தில் சேர வேண்டுமென்று சாவர்க்கர் அழைப்பு கொடுத்தார். ஏனெனில் பிரிட்டிஷ் ஆயுதப் படைகளில் இந்துக்கள் சேர்ந்தால், போருக்குப் பிந்தைய நாட்களில் ஏதேனும் உள்நாட்டு சிக்கலோ அல்லது நெருக்கடியோ ஏற்பட்டால் அதையே காரணியாகக் கொண்டு, இசுலாமிய சிறுபான்மையினரை முற்றிலும் ஒடுக்கி விடலாம் என்பதே அவரது எண்ணமாக இருந்தது.