தமிழினத்தின் ஈகைச்சுடர் மாவீரன் முத்துக்குமார்

தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் ஈழ அரசியலை பேசவைத்தவர் முத்துக்குமார். எப்போதுமே தமிழர்கள், தமிழினம் என்று மட்டுமே பேசிக்கொண்டிருப்பவர். “மாணவர்கள் உண்ணாநிலை போரட்டத்தை விடுத்துக் களம் காணுங்கள்” என்று கூறினார். “மாணவர்களே! உங்கள் போராட்டத்தின் வடிவத்தை மாற்றுங்கள், எந்த தலைவர்களின் பின்னாலும் உங்கள் போராட்டத்தை தொடராதீர்கள். அந்த மரபை அடித்து உடைத்து உங்களில் ஒருவனை தலைவனாக்குங்கள்!!” என்றும் முழங்கினார் முத்துக்குமார்.