ஆண்டுதோறும் உயர்த்தப்படும் மின்கட்டணம் – ஐயா சா. காந்தி

தமிழ்நாட்டில் ஜூலை 2025-லிருந்து உயர்த்தப்பட இருக்கும் மின்சாரக் கட்டணம் குறித்து மின்துறைப் பொறியாளர் அமைப்பின் சார்பாக ஐயா. சா. காந்தி அவர்கள் தலைமையில் சென்னைப் பத்திரிக்கையாளர் மன்றத்தில் ஊடக சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பிற்கு மே 17 இயக்கம் ஆதரவளித்தது. மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர். பிரவீன் குமார் அவர்கள் இதில் கலந்து கொண்டார்.

மின்சாரக் கட்டண உயர்வின் பின்னணியில் உள்ள காரணங்களைப் பட்டியலிட்டு, மின் உயர்வு குறித்த அறிக்கையை ஐயா. சா. காந்தி அவர்கள் வெளியிட்டார். ஒவ்வொரு ஆண்டும் மின்சாரக் கட்டணம் தவறான கணக்கீட்டின் அடிப்படையில் உயர்த்தப்படுவதாகவும், தனியார் பெரு நிறுவனங்களுக்கு சாதகமாக மின்சார வாரியம் திறந்த அணுகலை வழங்குவதால் ஏற்படும் மின்சார இழப்பு மற்றும் மின்சார வாரியத்திற்கு ஏற்படும் பல்லாயிரம் கோடி இழப்புகள் குறித்தும் விரிவான தகவல்களை எடுத்து வைத்துப் பேசினார்.  

மின்சாரக் கட்டணம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 2022-ல் தான்  உயர்த்தப்பட்டது. செப்டம்பர் 2022 -ல் சராசரி மின்சாரக் கட்டணம் யூனிட் ரூ. 5.72 லிருந்து ரூ 7.85 க்கு உயிர். மீண்டும் 2023-ல் 2.18%-மும், 2014 -ல் 4.83%-மும் உயர்த்தப்பட்டன. ஆண்டுதோறும் உயர்த்தப்பட்டாலும் பல்லாயிரம்  கோடிகள் இழப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. இது வரை 37% அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது.

மின்துறையில் ஏற்படும் இழப்பிற்கு தொடர்ந்து மின்கட்டணத்தை உயர்த்திக் கொண்டே இருந்தாலும் அதன் மூலம் ஏற்படும் இழப்புகள் குறையவில்லை. மின்கட்டண உயர்வுக்கு முந்தைய ஆண்டான 2021-22 -ம் ஆண்டில் ஏற்பட்ட இழப்பு 24,576 கோடி ஆகும். மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்ட 2022-க்குப் பின்பும், 2023-ல் 26499 கோடியும், 2024-ல் 24,050 கோடியும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

2022ம் ஆண்டின் கட்டண உயர்வுக்குப் பின்பான கணக்குகள்

தகவல்கள்நிதியாண்டுமின் விற்று வரவு (கோடியில்)சராசரி விலை (யூனிட்)ஆண்டின் மொத்த இழப்பு (கோடியில்)
கட்டண உயர்வுக்கு முன்2022-23 செப். வரை22,872.79ரூ.5.72 
கட்டண உயர்விற்கு பின்செப். 2022-மார்ச் 2023 வரை37,633.56ரூ.7.8526,499  
2.18% உயர்த்த பட்டது2023-2471,614ரூ. 7.6724,050
4.83% உயர்த்தப்பட்டது.2024-25இன்னமும் கணக்கு சமர்பிக்கப்படவில்லை

Source: TANGEDCO true up reports.

மின்வாரியம் 1,59,000 கோடி இழப்பு ஏற்பட்ட காரணத்தைச் சொல்ல வில்லை. ஆணையம் வாரியத்தை மக்களுக்கு, பதிலளிக்க விடாமல் தடுத்தும் விட்டது. கடந்த நான்காண்டுகளில் தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்ட மின்வாரியக் கடன் மட்டும் 50,434 கோடி. 

மின்வாரியத்தின் இரண்டாவது வணிகமாக, தனியாருக்கும் மின்சாரத்தைத் திறந்து விடும்  திறந்த அணுகல் (OPEN ACCESS) என்ற கட்டமைப்பு இருக்கிறது. இதன் மூலம் தனியார் நிறுவனங்களிடமும் மின்சாரத்தை நுகர்வோர் வாங்கலாம்.  தனியாருக்குத் திறந்து விடப்பட்ட இந்த சந்தை மூலம் வாங்குகின்ற நுகர்வோரின் வணிக கணக்குகள் முழுமையாக மறைக்கப்படுகின்றன. இதன் படி 15,000 க்கும் மேற்பட்ட தனியார்களின் மின்சாரம் ஒரே கம்பியில் பாய்கின்றன.

மின்சார ஒழுங்கு முறை ஆணையம் மின்சாரக் கம்பிகளிலேயே 10,000 மெகாவாட்டுக்கு மேலான தனியாரின் மின்சாரத்தை மின்வாரியம் 12 மாதங்களுக்கு சேமிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. கம்பிகளில் மின்சாரம் சேமிக்க முடியும் என்பது விஞ்ஞானப் பூர்வ வேடிக்கையாக இருக்கிறது. இதில் ஆண்டுக்கு 1905 கோடி (2018 கணக்கில்) இழப்பு ஏற்படுவதாக மின் வாரியமே கூறுகிறது.

திறந்த அணுகலில் வழங்கப்படும் மின்சாரம் ஒவ்வொறு 15 நிமிடத்திற்கும் நேர் செய்யப்பட வேண்டும். மாதத்தில் 2,880 நேரப் பட்டியலில் (TIME BLOCK), தனியாரின் மின்சாரமும், மின்வாரிய மின்சாரமும் கணக்கிடப்பட வேண்டும்.

ஆனால் மின்சார வாரியம் ஒரு மாதத்தில் 2,880 நேரப் பட்டியலுக்கு பதிலாக, நான்கே நான்கு நேரப்பட்டியலில் தான் நேர் செய்கிறது. இதனால் ஆண்டுக்கு 4,400 கோடி இழப்பு என கணக்கிடுகிறார்கள்.

தனியார் மின்சாரத்தை கணக்கிடுவதில் தான் பல முறைகேடுகள் நடக்கின்றன. தகுதியில்லாதவர்களுக்கு திறந்த அணுகலின் மூலம் அனுமதியை ஆணையம் வழங்கியிருப்பதன் மூலம், ஆண்டுக்கு, 1,800 கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. 2017லிருந்து, 2021 வரையிலான காலத்தில் திறந்த அணுகலில் வசூலித்திருக்க வேண்டிய 9,313 கோடியை வாரியம் வசூலிக்கவே இல்லை. இந்தத் தொகை மின்கட்டண உயர்வில் கழிக்கப்பட்டிருக்க வேண்டிய தொகையாகும்.

திறந்த அணுகலில் ஏற்பட்ட இழப்புகளை ஈடு செய்யவே, மின்சாரக் கட்டணம் 37% உயர்த்தப்பட்டாலும், ஆண்டுதோறும் உயர்த்தப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. ஆனால் ஆண்டு மொத்த இழப்பு அப்படியே இருக்கிறது. இந்த இழப்பு முழுவதும் பெரும் நிறுவனங்களுக்கு கொள்ளை லாபமாக செல்கிறது. திறந்த அணுகல் இழப்பு அனைத்திற்கும், ஒழுங்கு முறை ஆணையமும், மின்வாரிய உயர் அதிகாரிகளுமே முழுப் பொறுப்பாக முடியும். 

இது தவிர போலி மின் விற்பனை (PSUEDO CAPTIVE), மின்னழுத்தம் (HARMONICS), மின்சாரம் சேமிக்க இயலாத நிலையங்கள் (Must Run Plants), பசுமை ஆற்றல் திறந்த அணுகல் ( Green Energy Open Access) என பலவழிகளில் திறந்த அணுகல் மூலம் இழப்பு பெருகிக் கொண்டே போகிறது. இந்த கணக்குகளையும் உள்ளடக்கியே, மின்சாரக் கட்டணம் திருத்தப்பட வேண்டும்.

கடந்த நான்காண்டுகளில் தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்ட 50,434 கோடி கடன் தொகையினால், சுகாதாரம், கல்வி துறைகளில் நிதி ஒதுக்கீட்டில் துண்டு விழுந்திருப்பதே நடந்திருக்க முடியும்.  இது தவிர மின்சாரக் கட்டண மானியம் என்பது தனியானது. இவ்வாறு மின்சார வாரியத்தின் இழப்புகளை மாநில அரசே ஏற்கும் பொழுது, மக்களின் சமூக நலத் திட்டங்களில் வெட்டு தவிர்க்க முடியாதது.

மின்சாரக் கட்டண ஆணை, மக்களிடம் அதிகம் வசூலித்து, பெரும் நிறுவனங்களுக்கு அதனை வாரி வழங்குகிறது. எனவே செப்டம்பர் 9, 2022 நாளிட்ட கட்டண உயர்வு ஆணை முழுமையாக திருத்தப்பட வேண்டும்.

ஜூலை 2025ல் உயர்த்தப்பட இருக்கும் மின்சாரக் கட்டணம் நிறுத்தி வைக்கப்பட வேண்டும். ஐந்தாண்டு மின்கட்டணம் ரத்து செய்யப்பட்டு, உண்மையான கணக்குகளின் அடிப்படையில் மின்கட்டணம் திருத்தப்பட வேண்டும். மின்சாரப் பயனீட்டாளர்கள், மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தையும் வலியுறுத்தினால் ஒழிய மின்சாரக் கட்டணம் உயர்த்திக் கொண்டே இருப்பதை நிறுத்த மாட்டார்கள்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »