அரசியல்
சுயமரியாதை இயக்க வீராங்கனை அன்னை மீனாம்பாள்
பல போராட்டங்கள், மாநாடுகள் என அனைத்திலும் பெண் என்று பின் நிற்காமல் தாமாக முன்னெடுத்து தலைமை வகித்த அன்னை மீனாம்பாள் பட்டியல் சமூகத்திற்காகவும் அவர்கள் மேம்பாட்டிற்காகவும் தீவிரமாக பணியாற்றத் தொடங்கினார். அவர்களின் கல்வி, ஒழுக்கம், நம்பிக்கையை மேம்படுத்த ஆவனசெய்தார். தீண்டாமை, சாதிவெறி, ஒடுக்குமுறை இவற்றை எதிர்த்து பெண்கள் போராடி தங்களை விடுவித்துக் கொண்டு வெளிவரவேண்டும் எனவும் அறிவுறித்தினார். அதேபோன்று தானும் அதை உணர்ந்து பின்பற்றி எல்லாவற்றிலும் சிறந்து விளங்கினார்.