காசாவில் உயிரிழப்புகள் குறித்த அறிக்கை

கடந்த பத்து மாதங்களுக்கும் மேலாக இசுரேல் அரசு காசா மீது தாக்குதல் நடத்தி இனப்படுகொலை நடவடிக்கைகளை தொடர்ந்து  வருகிறது. அப்பாவி பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கில் கொன்று குவித்து தனது இனவெறிக்கு இரையாக்கிக் கொண்டிருக்கிறது இசுரேல். தற்போது இசுரேலின் போர்வெறி காரணமாக பாலஸ்தீனத்தில் மருத்துவர்களும் செவிலியர்களும் எதிர்கொள்ளும் வன்கொடுமைகளை மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) அண்மையில் அறிக்கையாக ஆகஸ்டு 26, 2024 அன்று வெளியிட்டுள்ளது.

இசுரேல் – பாலஸ்தீனத்தின் மீது தீவிரமாக தாக்குதலைத் தொடங்கிய அக்டோபர் 2023இல் இருந்து தற்போது வரை இசுரேலியப் படைகள் செய்து வரும் மனித உரிமை மீறல்கள் காணொளிகளாகவும் செய்திகளாகவும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. குழந்தைகள் முதல் ஊடகவியலாளர்கள் வரை கொன்று குவித்த இசுரேல் தற்போது பாலஸ்தீனிய மருத்துவப் பணியாளர்களைத் தாக்கி, அவர்களை தடுப்பு காவலில் வைத்துள்ளது. மேலும் போர் விதிமுறைகளை மீறி, மருத்துவர்களை சித்திரவதை செய்வதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் அண்மையில் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனத்தில் உள்ள மருத்துவமனைகள் மீது கடந்த பத்து மாதங்களில் 890 முறை இசுரேல் தாக்குதல்களை நடத்தி இருக்கிறது. அங்குள்ள 36 மருத்துவமனைகளில் 31 மருத்துவமனைகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. காசாவில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிஃபா மருத்துவமனையும் இசுரேலால் குண்டுவீசி தரை மட்டமாக்கப்பட்டிருக்கிறது.

காசாவில் மீதமுள்ள மருத்துவமனைகளில் சேவையாற்றும் மருத்துவ பணியாளர்களும் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இக்கட்டான சூழ்நிலையில் மருத்துவ சேவையாற்றிய இவர்களும் தற்போது இசுரேல் படைகளால் குறிவைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இசுரேலியப் படைகள் இதுவரை நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை குறித்து ஊடகங்களும் மனித உரிமை அமைப்புகளும் வெளியிட்ட செய்திக் குறிப்பிலிருந்து கீழுள்ள அட்டவணை தொகுக்கப்பட்டுள்ளது.

இசுரேல் குண்டுவீசி
நிகழ்த்திய படுகொலைகள்
3,457
காயம் / படுகாயமடைந்தோர்91,128
பெற்றோர் இருவரையும் அல்லது
அவர்களில் ஒருவரை இழந்த
பாலஸ்தீனிய குழந்தைகள்
17,000
பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள்69%
இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள்20 லட்சம்
இசுரேல் பயன்படுத்திய வெடிபொருட்கள்82,000
படுகொலை செய்யப்பட்ட மற்றும்
காணாமல் போன பாலஸ்தீனியர்கள்
49,480
மருத்துவமனைகளுக்கு கொண்டு
செல்லப்பட்டும் உயிர் பிழைக்காத
பாலஸ்தீனியர்கள்
39,480
காணாமல் ஆக்கப்பட்டோர்10,000
படுகொலை செய்யப்பட்ட பெண்கள்10,980
படுகொலை செய்யப்பட்ட  குழந்தைகள்16,314
கொல்லப்பட்ட விஞ்ஞானிகள்,
பேராசிரியர்கள், மற்றும் ஆராய்ச்சியாளர்கள்
107
பட்டினியால் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்கள்35
ஊட்டச்சத்து குறைபாடு அல்லது
உணவுப் பற்றாக்குறையால் இறக்கும்
அபாயத்தில் உள்ள குழந்தைகள்
3,500
சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு
செல்ல வேண்டிய நிலையில் உள்ள
காயமடைந்த மக்கள்
12,000
வெளிநாட்டில் சிகிச்சை
தேவைப்படும் பல்வேறு நோய்கள்
3,000
மரணத்தை எதிர்நோக்கும்
புற்றுநோயாளிகள்
10,000
இடப்பெயர்ச்சி காரணமாக தொற்று
நோய்களால் பாதிக்கப்பட்ட மக்கள்
1,737,524
காசாவில் இருந்த கைதிகள்5,000
மருத்துவக் குழுக்களிடமிருந்த
தடுப்புக்காவல் வழக்குகள்
310
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள
ஊடகவியலாளர்கள் (இதுவரை பெயர்
வெளியிடப்பட்டவர்களில் இருந்து)
36
படுகொலை செய்யப்பட்ட 
மருத்துவக் குழு உறுப்பினர்கள்
885
படுகொலை செய்யப்பட்ட
சிவில் பாதுகாப்புக் குழுக்கள்
79
கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள்165
ஹெபடைடிஸ் ’ஏ’ நோயால்
பாதிக்கப்பட்ட மக்கள்
71,338
ஆபத்தில் உள்ள கர்ப்பிணி பெண்கள்60,000
மருந்துகள் நுழைவதைத் தடுப்பதால்
ஆபத்தில் உள்ள நாள்பட்ட நோய்களால்
பாதிக்கப்பட்ட நோயாளிகள்
3,50,000  
இசுரலால் குறி வைக்கப்பட்ட மக்கள்
வாழ்விடங்கள்
168
இசுரலால் தாக்குதலுக்கு உள்ளான 
பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள்
332
இசுரலால் அழிக்கப்பட்ட தேவாலயங்கள்3
இசுரலால் அழிக்கப்பட்ட அரசு நிறுவனங்கள்198
இசுரலால் முற்றிலும் அழிக்கப்பட்ட மசூதிகள்610
இசுரலால் அழிக்கப்பட்ட பாரம்பரிய
மற்றும் பண்பாட்டு தளங்கள்
206
இசுரலால் முற்றிலும் அழிக்கப்பட்ட
பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள்
117
பகுதியளவில் அழிக்கப்பட்ட மசூதிகள்211
அழிக்கப்பட்ட விளையாட்டு
மைதானங்கள், உடற்பயிற்சி கூடங்கள்
34
முற்றிலும் அழிக்கப்பட்ட குடியிருப்புகள்1,50,000
வாழ தகுதியற்ற குடியிருப்புகள்80,000
பகுதியளவில் அழிக்கப்பட்ட குடியிருப்புகள்2,00,000
அழிக்கப்பட்ட மின்சார நெட்வொர்க்குகள்3,030 km
அழிக்கப்பட்ட நீர் கிணறுகள்700
இஸ்ரேல் உருவாக்கிய புதைகுழிகள்
(இந்த கல்லறைகளில் இருந்து 520
உடல்கள்  மீட்கப்பட்டன.)
7
இசுரலால் குறி வைக்கப்பட்ட ஆம்புலன்ஸ்கள்131
சேவை முடக்கப்பட்ட மருத்துவமனைகள்34
சேவை முடக்கப்பட்ட மருத்துவ மையங்கள்68
குறி வைக்கப்பட்ட சுகாதார மையங்கள்162

இவற்றில் 50க்கும் மேற்பட்ட சுகாதார நிலையங்களும் 300 ஆம்புலன்ஸ்கள் வண்டிகளும் இசுரேல் படைகளால் திட்டமிட்டே சேதப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு பாலஸ்தீன மருத்துவ கட்டமைப்புகளை சிதைத்தும் மக்களின் குடிநீர் ஆதாரங்களை அழித்தும் வருவதால் காசாவில் குழந்தைகளிடையே போலியோ பரவக்கூடிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருந்துகளையும் தடுப்பூசிகளையும் தடை செய்யும் மனித நேயமற்ற செயலை இசுரேல் தொடர்ந்து செய்து வருகிறது. இது போன்ற நடவடிக்கைகளை இசுரேல் தொடர்ந்தால், போலியோ தடுப்பூசி தேவைப்படும் 640,000க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் காப்பாற்ற முடியாது என்று மனித உரிமை ஆர்வலர்கள் எச்சரிக்கைக் குரல் எழுப்புகின்றனர்.

இஸ்ரேலிய இராணுவம் பாலஸ்தீன மக்களுக்கான உணவு/ நீர் மற்றும் மருந்துகளைத் தடுப்பதை ஒரு போர்க் குற்றமாக குறிப்பிட்டுள்ளது மனித உரிமைகள் கண்காணிப்பகம். உயிர்காக்கும் மருந்துகளை காசாவுக்குள் நுழைவதைத் தடுப்பதன் மூலம் சர்வதேச நீதிமன்றத்தின் விதிகளை இசுரேல் மீறுகிறது எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

2009-இல் ஈழத்தில் நடந்த தமிழினப்படுகொலை போலவே பாலஸ்தீனத்திலும் பல மனித உரிமை மீறல்கள் நம் கண்முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஒரு பெரும் சோகம் நிகழும் போது உடனடி போர்நிறுத்ததிற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது இன்றியமையாததாகிறது. குறைந்தபட்சம் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ சேவைகள் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டால் மட்டுமே பெருந்தொற்றுகளைத் தடுக்க முடியும். ஆனால் அத்தகைய மனித நேய முறைகள் அனைத்தையும் வழிமறித்து நிற்கிறது இசுரேலிய அரசு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »