கோவை இரண்டாம் கட்ட பரப்புரை: ஏப்ரல் 10, 2024

பாஜக வீழட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்” என்பதை முன்வைத்து தமிழ்நாடு தழுவிய அளவில் மே 17 இயக்கம் தொடங்கிய பரப்புரையில் ஏப்ரல்10, 2024 அன்று பாஜக வேட்பாளர் அண்ணாமலையை எதிர்த்து கோவைப் பகுதியில் இரண்டாம் கட்டப் பரப்புரை நடந்தது. மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தோழமை அமைப்பான விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் தோழர். குடந்தை அரசன் அவர்களுடன் இணைந்து உரையாற்ற, தோழர்கள் துண்டறிக்கைகள் விநியோகித்தனர். விடுதலைச் சிறுத்தைகள், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் தோழமை கட்சிகள், அமைப்புகள் இணைந்து பரப்புரையில் ஈடுபட்டனர்.

இந்தப் பரப்புரையில் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய உரையின் சுருக்கம் :

இப்பொழுது நடக்கும் தேர்தல் மோடி பிரதமராக வரக்கூடாது என்பதற்காக நடக்கும் தேர்தல். 10 வருடத்திற்கு முன்பும், பின்பும் பெட்ரோல், டீசல், கேஸ் விலை என்னவென்று பார்த்தாலே இந்த பாஜக ஆட்சியில் எவ்வளவு மோசமான வாழ்க்கையில் இருக்கிறோம் என்பது தெரிந்துவிடும். இவை விலை ஏறியதால் அரிசி, பருப்பு, காய்கறி விலையும் உயர்கிறது. இவை அனைத்தும் ஒரு மாநிலத்தில் இருந்து  இன்னொரு மாநிலத்திற்கோ, ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கோ கொண்டு வரக்கூடியவை. இதனால் போக்குவரத்து விலை இரண்டு மடங்காகியதால் விலைவாசியும் உயர்ந்திருக்கிறது. லாரி இன்சூரன்ஸ் வரி, சாலை வரி, சுங்கவரி என நம்மை வரி கட்ட வைத்து நாசப்படுத்தியோடு, உலகில் எந்த இடத்திலும் இல்லாத அளவிற்கு சாப்பாட்டுக்கும் வரி. இட்லிக்கு வரி, சட்னிக்கு வரி, மொபைல் ரீசார்ஜ்-க்கும்  வரி என இவ்வளவிற்கும் வரி போட்டிருக்கிறார்களே, உங்கள் வருமானம் ஏறியதா? அனைத்து விலைவாசியும் இரண்டு மடங்கு ஏறும்போது உங்களுடைய வருமானம் இரண்டு மடங்கு ஏறியிருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

ஒரு கவுன்சிலர் தேர்தலில் கூட வெல்ல முடியாதவர்கள் இங்கு வந்து கலவரம் செய்கிறார்கள். இவர்கள் வென்றால் என்ன எல்லாம் செய்வார்கள்? உத்தரப் பிரதேசத்தில் பெண்கள் தினம் தினம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பாதிக்கப்படுகிறார்கள் என்று செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. இந்த மண்ணை எத்தனையோ வருடங்களாக காங்கிரஸ் முதற்கொண்டு திமுக, அதிமுக கட்சிகள் ஆட்சி செய்திருக்கின்றன. ஆனால் அவர்கள் எல்லாம் கலவரம் செய்ததாக ஏதாவது வரலாறு இருக்கிறதா? இங்கே எத்தனையோ கட்சிகள் இருக்கின்றன. மேடைக்கு மேடை போட்டு ஒருவருக்கொருவர் திட்டுவார்களே ஒழிய, ஒரு கட்சியும் இங்கு கலவரம் செய்ய நினைத்ததில்லை. ஏனென்றால் அவர்கள் தமிழ்நாட்டை சொந்த மண் என்று நினைக்கிறார்கள். வீட்டுக்குள் அண்ணன் தம்பிக்குள் ஆயிரம் சண்டை இருக்கும், ஆனால் வீட்டுக்குள் தீ வைத்து விடுவோமா? இங்கு சசிகுமார் என்ற ஆர்.எஸ்.எஸ்-காரன் இறந்து விட்டான் என்று கலவரம் செய்தார்களே? பல நூறு கோடி பெருமானமுள்ள கடைகளை அடித்து நொறுக்கினார்கள். இந்த மண்ணுக்கு சம்பந்தமே இல்லாத கட்சி இங்கு வந்து கலவரம் செய்வார்கள் என்றால் அந்த கட்சிக்கு நாம் ஓட்டு போட வேண்டுமா? அப்படி ஓட்டு போட்டால் நம்மை விட பைத்தியக்காரர்கள் வேறு யாராவது இருக்க முடியுமா?

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த காமராசர், பார்வர்ட் பிளாக் கட்சியை சேர்ந்த முத்துராமலிங்கத் தேவர், அதிமுகவைச் சேர்ந்த எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தமிழ்நாட்டுத் தலைவர்களைத் திருடுகிறார்களே ஒழிய, இந்த 40 வருடத்தில் அவர்களுக்கென்று ஒரு தலைவர் இருக்கிறாரா? பகத்சிங் எங்கள் தலைவர் என்று சொல்வார்கள். அவர் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர், நாத்திகர். அடுத்து அம்பேத்கரை தலைவர் என்கிறார்கள். அவர் இந்து மதத்தை ஒழிப்பது தான் எனது லட்சியம் என்று சொன்னவர். திருவள்ளுவருக்கு மாலை போட்டார்கள். இப்படி அவர்களுக்கென்று ஒரு தலைவர் இல்லாத கட்சி பாஜக. பாரதிய ஜனதா கட்சி தலைவர்களை உருவாக்கக்கூடிய கட்சி அல்ல, தறுதலைகளை உருவாக்கக்கூடிய கட்சி.

கோவை கணபதி பேருந்து நிறுத்தம் பரப்புரையில் எடுத்த புகைப்படம்

ஏதோ மாநில கட்சிகள் இங்கு இருப்பதால் நாம் பிழைத்துக் கொண்டிருக்கிறோம். அதுவும் அதிமுக முழுக்க முழுக்க பாஜக சார்பு கட்சி. அண்ணாமலை வெல்லக்கூடாது என்று எடப்பாடி பேசுகிறாரே ஒழிய, மோடி வெல்லக்கூடாது என்று பேசுவதில்லை. எதிர்க்கட்சிக்காரர்கள் அனைவர் வீட்டிற்கும் அமலாக்கத்துறை போகிறது. ஆனால் எடப்பாடி வீட்டிற்கு ஏன் போகவில்லை? இங்கு பிஜேபி இரண்டு முகத்தில் வருகிறது. ஒன்று அண்ணாமலை என்ற முகம், இன்னொன்று அதிமுகவின் முகம். அதனால் நீங்கள் அதிமுகவிற்கு போடும் ஓட்டும் பாஜகவிற்கு போடும் ஓட்டுதான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஜி.எஸ்.டி-யால் ஈரோடு, திருப்பூர், கோவையில் 40000 நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. திருப்பூரில் ஓடிக்கொண்டிருந்த மில்கள் நின்றுவிட்டன. திருப்பூருக்கு வர வேண்டிய பஞ்சு பங்களாதேசிற்கு போகிறது. பருத்தி குசராத்தில்தான் அதிகம் விளைகிறது. அவை பங்களாதேசிற்குதான் போகின்றன. எப்படி திருப்பூர், ஈரோடு வளரும்? வங்கியில் பணம் கட்டினாலும் ஜி.எஸ்.டி. கணக்கில் பணம் இல்லை என்றாலும் ஜி.எஸ்.டி, இன்சூரன்சுக்கும் ஜி.எஸ்.டி. வெள்ளைக்காரன் காலத்தில் கூட இல்லாத அளவுக்கு அத்தனைக்கும் வரி. எப்படி வாழ முடியும்?

மோடி ஏழரை லட்சம் கோடி கொள்ளை அடித்திருக்கிறார் என நாங்கள் சொல்லவில்லை, CAG அறிக்கை சொல்கிறது. ஒன்றிய அரசின் கணக்குகளைப் பார்க்கும் துறை அது. அது மட்டுமில்லை, இராணுவத்துக்கு விமானம் வாங்க 35 ஆயிரம் கோடி, தேர்தல் நிதிப் பத்திரம் என்று 11000 கோடி ஊழல். இப்படி ஊழல் செய்தால் அண்ணாமலை 30 லட்சம் கோடி வாட்ச் கட்டுவாரா? மாட்டாரா? இந்த காசுகள் எல்லாம் எங்கிருந்து வந்தது? நம் பாக்கெட்டில் இருந்து தான் போனது. அதானிக்கு, அம்பானிக்கு, மோடிக்கு என அனைத்துமே நம் பாக்கெட்டில் இருந்துதான் திருடப்படுகிறது.

எங்களை இந்த கூட்டம் பேசவிடாமல் மிரட்டுகிறது. இந்த பிஜேபி கூட்டம் பணத்துக்காக வேலை செய்யும் கூட்டம். நாங்கள் இனத்துக்காக வேலை செய்யும் கூட்டம். அதனால் எங்களுக்கு சாவைக் கண்டும் பயமில்லை. இனத்துக்காக கழுத்தில் சயனைடுடன் போரிட்ட பிரபாகரனின் கூட்டம் நாங்கள். அதனால் எச்சரிக்கையுடன் இருங்கள். கருத்தைப் பேசினால் கருத்தால் எதிர்கொள்ளுங்கள். உங்கள் தலைவனே கருத்தைப் பேசாமல் உளறுபவர். கருத்தை கருத்தால் எதிர்கொள்ளாமல் சண்டையிட வருகிறீர்கள் என்றால், எங்களுக்கும் அதே போல சண்டை போடத் தெரியும்.

பெரியாரின் பேரன்களான எங்களுக்கு பெரிய வரலாறு இருக்கிறது. பிரபாகரனின் தம்பிகளுக்கு அதைவிட பெரிய வரலாறு இருக்கிறது.  உங்களுக்கு மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்த சாவர்க்கர்தான் தலைவர். ஆனால் எங்களுக்கு பகத்சிங், பெரியார், பிரபாகரன், ஜீவா, அம்பேத்கர் என பல தலைவர்கள் இருக்கிறார்கள். அதனால் மிரட்டலை எங்களிடம் வைத்துக் கொள்ளாதீர்கள்.

கோவை, மக்களே இந்த சங்கிக் கூட்டம் மீண்டும் உங்களை அடுப்பெரிக்க வைத்து விடும். கேசுக்கு மானியம் தருகிறோம் என்று சொன்னவர்கள், போடவில்லை. 15 லட்சம் தருகிறோம் என்று சொன்னவர்கள், தரவில்லை. மானியத்திற்காக வங்கி கணக்கை வாங்கிக் கொண்டு, கடைசியில் அதில் பணம் இல்லை என்பதற்காக அதற்கும் காசு பிடுங்கிக் கொண்டார்கள். அதனால் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனாலும் நம்மைக் காப்பாற்ற முடியாது அந்த ஆண்டவனையே கூட காப்பாற்ற முடியாது” என திருமுருகன் காந்தி பேசினார்.

தென்சென்னை பரப்புரை :

தென்சென்னையில் கடந்த ஏப்ரல் 2-ந்தேதி தொடங்கிய பரப்புரை நாள்தோறும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன்படி 10/4/2024 அன்று இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர். பிரவீன்குமார் அவர்கள் தலைமையில் வாகனப் பரப்புரை நடந்தது. மே 17 இயக்கத் தோழர்களால் மேற்கு ஜாபர்கான் பேட்டை, எம்.ஜி.ஆர் நகர் (சூளைப்பள்ளம் போலீஸ் பூத்), கானு நகர் நெசப்பாக்கம், நெசப்பாக்கம் ராஜன் சாலை, விருகம்பாக்கம் RTO மைதானம் மற்றும் சாலி கிராமம் ஆகிய பகுதிகளில் துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டன.

தொடர்ந்து மே 17 இயக்கம் முன்னெடுக்கும் பாஜகவுக்கு எதிரான பரப்புரையில் தோழர்கள், உணர்வாளர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் திரண்டு வந்து கலந்து கொள்ள உரிமையோடு அழைக்கிறோம்.

தொடர்புக்கு : 9884864010 எண்ணை அணுகவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »