அவதூறுகளுக்கு எதிர்வினை-திருமுருகன் காந்தி

மே 17 இயக்கத்தின் தோழர்கள், சங்கிகளின் வன்முறையை அன்றாடம் எதிர்கொண்டு பரப்புரை மேற்கொள்கின்றனர். கிட்டதட்ட 120க்கும் அதிகமான பரப்புரை கூட்டங்களை முடித்து, லட்சக்கணக்கான துண்டறிக்கைகளை கடந்த 12 நாட்களில் விநியோகம் செய்துள்ளனர். பாஜக எதிர்ப்பு துண்டறிக்கைகளை மக்களிடம் விநியோகிப்பதும், மக்கள் படிப்பதுமான நூற்றுக்கணக்கான புகைப்படங்களை பதிவேற்றம் செய்தும் உள்ளோம். சிதம்பரம் தொகுதியில் சாதி இறுக்கமுள்ள ஊர்களில் பரப்புரையை வீடுவீடாக முடித்துள்ளனர். நெருக்கடியான இடங்களை தேர்ந்தெடுத்து பரப்புரை செய்கிறார்கள். எங்களை தாக்க முனைந்த சங்கிகளின் ஒரே ஒரு சம்பவம் மட்டுமே காணொளியாக வந்துள்ளது. ஆனால் அன்றாடம் இந்த நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.

கோவையில் 100 காவலர்கள், அதிரடிப்படையினர், தேர்தல் கமிசனின் பறக்கும் படை என அதிகாரவர்க்கத்தின் முற்றுகைக்குள்ளாகவே பரப்புரை செய்ய முடிந்தது. சிறுசிறு விதிகளைக் காட்டி அனுமதி மறுப்பதும், போராடி அனுமதி பெருவதும் அன்றாட நிகழ்வாகிவிட்டது.

தற்போது உதகை கூடலூரின் சேரம்பாடி எனுமிடத்தில் பரப்புரைக்கான அனுமதியை மறுத்து காவல்துறை வாகனத்தை கைப்பற்ற முனைந்தனர். காரணம் பாஜகவின் எல்.முருகன் இன்று பேச வருவதாக சொல்கிறார்கள். போராடி உரிமை பெற்று பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறோம்.

இந்நிலையில் மே17 இயக்கம் பாஜக ஆதரவாக இயங்குகிறது என கீழ்த்தரமான பரப்புரையை செய்ய ஆரம்பித்துள்ளார்கள். போலி புரட்சிகர பார்ப்பானின் தூண்டுதலில் கீழ்த்தரமாக நடந்துகொள்கின்றனர். கிட்டதட்ட 7 தொகுதிகளில் சங்கிகளுக்கு எதிரான பரப்புரையில் இருப்பதால் உடனே எதிர்வினை செய்யும் நிலையில் நாங்கள் இல்லை. எமது பரப்புரைகள் நேரலையில் உள்ளன, புகைப்படங்கள் உள்ளன, ஊடக பேட்டிகள் உள்ளன.

மேலும் எங்களுடைய ஒவ்வொரு நிகழ்விலும் விசிக, மதிமுக, கம்யூனிஸ்டுகள், அம்பேத்கரிய அமைப்புகள், எழுத்தாளர்கள், இசுலாமிய அமைப்புகள் என பல முற்போக்கு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் பங்கேற்கின்றனர். இருந்தும் எம்மீதான காழ்ப்புணர்வினால் மிகக்கீழ்த்தரமாக, அநாகரிகமாக, எதிரிக்கு காட்டிக்கொடுக்கும் வகையில் முற்போக்கு முகமூடியில் அவதூறுகளை பரப்புகின்றனர். இதற்கான எதிர்வினையை பொதுச்சமூகத்தின் மனசாட்சிக்கு விட்டுவிடுகிறேன்.

எமது பரப்புரையை ஆயிரக்கணக்கான மக்கள் நேரடியாக பார்த்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் காணொளியில் கண்டுள்ளனர். எமது தேர்தல் பரப்புரை முடிந்ததும் இதற்குரியவகையில் இவர்களின் யோக்கியதையை மே17 இயக்கம் அம்பலப்படுத்தும். சங்கிகளின் தரத்திற்கு கீழிறங்கி பொய்ப்பரப்புரை செய்பவர்களை எமது பரப்புரையை கண்டவர்கள், எமது செயல்பாடுகளை அறிந்தவர்கள், தமது அற உணர்வின் கீழ், இப்பொய் பரப்புரைகளுக்கு எதிர்வினை செய்வார்கள் என நம்புகிறேன். இப்பணியை உங்களிடம் விட்டுவிடுகிறேன்.

https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fthirumurgangandhimay17%2Fposts%2Fpfbid05NbcKe5EHDYHuySEvG5T3EaS4RZWJhGRA4fPptrDRVkZfZQNKuyy9qxkvh72Xgmal&show_text=true&width=500

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »