Blog
இராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மாணவர்கள் மீதான அடக்குமுறையை வன்மையாக கண்டிக்கின்றோம்!
போராடும் இராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மாணவர்கள் மீதான அடக்குமுறையை வன்மையாக கண்டிக்கின்றோம்! – மே பதினேழு இயக்கம் கடலூர் மாவட்ட…
மொழிப்போர் ஈகியர்களுக்கு மே 17 இயக்கத்தின் வீரவணக்கம்.
தமிழ் மொழி காக்க உயிர் நீத்த மொழிப்போர் ஈகியர்களுக்கு மே 17 இயக்கத்தின் வீரவணக்கம். தமிழர்களின் இரண்டாயிரம் வருட பகையான ஆரியம்…
தமிழ்நாட்டு மீனவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு எரித்து படுகொலை!
தமிழ்நாட்டு மீனவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு எரித்து படுகொலை! சிங்களப் பேரினவாத அரசை கண்டித்து நடைபெறும் போராட்டத்தில் அணிதிரள்வோம்! – மே பதினேழு…
நெய்வேலி NLCIL நிறுவனத்தில் ஐடிஐ-அப்ரண்டிஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு உடனடியாக வேலை வழங்கு!
நெய்வேலி NLCIL நிறுவனத்தில் ஐடிஐ-அப்ரண்டிஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு உடனடியாக வேலை வழங்கு! – மே பதினேழு இயக்கம் இந்திய அரசின் பொதுத்துறை…
கேரளா கல்வித்துறையில் இந்துத்துவத்திணிப்பு
கேரளாவில் இருக்கிற ராஜீவ் காந்தி பயோடெக்னாலஜி மையத்திற்கு ஆர்எஸ்எஸ் தலைவர் எம் எஸ் கோல்வாக்கர் பெயரை சூட்டுவதாக மத்திய அரசு மாநில…
கமலா ஹாரிஸை ஏன் கொண்டாட முடியாது!
சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அதிபராகவும், கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நிறவெறிக்கு ஆதரவாகவும், குடியேறிகளுக்கு எதிராகவும் தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செயல்படுவதால், முற்போக்காளர்கள் மத்தியில் ஜோ பைடன், கமலா ஹாரிஸ் கூட்டணிக்கு மாபெரும் ஆதரவு உள்ளது. இந்நிலையில் அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வெற்றி பெற்று முற்போக்காளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கமலா ஹாரிஸை கொண்டாடி வருகின்றனர். கமலா ஹாரிஸ் தந்தை ஜமைக்காவை சேர்ந்த கறுப்பினத்தவர் என்பதால் கறுப்பின பெண் என்றும், அவரது தாயார் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதால் தெற்காசியாவை சேர்ந்தவர் என்பதும், இந்த பின்னணியில் முதல் பெண் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதால் அவரை கருப்பினத்தவர்கள் முதற்கொண்டு பெண்ணியவாதிகள் வரை கொண்டாடி வருகின்றனர். சிறுபான்மையினரின், குடியேறிகளின் பாதுகாவலர் போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளனர். குறிப்பாக இந்தியாவை சேர்ந்த ஊடகங்கள் முதல் அரசியல்வாதிகள் வரை பெருமைப்பட பேசிவருகின்றனர். இதற்கெல்லாம் தகுதியானவர் தானா கமலா ஹாரிஸ்? கமலா ஹாரிஸ் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு பணக்கார பார்ப்பன குடும்பத்தின் வம்சாவளியை சேர்ந்தவர். அவரது பெற்றோர் சமூகத்தில் மிக உயர்ந்த நிலையில் இருக்கும் போது தான் அமெரிக்காவில் குடியேறியுள்ளனர். பிற கருப்பினத்தவர்கள் போன்றோ, குடியேறிகள் போன்றோ எந்தவித சமூக பிரச்சனைகளையும், பொருளாதார பிரச்சனைகளையும் சந்திக்காதவர் தான் கமலா ஹாரிஸ். ஏழ்மையை அறிந்திடாதவர். இப்படிப்பட்டவரை ஒரு சராசரி கருப்பினத்தவரோடோ, இல்லை குடியேறிவரோடோ ஒப்பிடவே முடியாது. அதற்கான எந்த தகுதியும் இல்லாதவர் என்பதை தான் அவரது கடந்தகால செயல்பாடுகளும் உணர்த்துகின்றன. சான் பிரான்சிஸ்கோ மாவட்ட வழக்கறிஞராக பணியாற்றிய போது, போதைப் பொருள் வழக்குகளில் மிகக்கடுமையாக நடந்துகொண்டார். ஆனால் ஒரு வழக்கிற்கு ஆதாரமாக கருதப்பட்ட ஒரு போதைப் பொருளின் தன்மையை மாற்றிய குற்றச்சாட்டும் அவர் மீது உள்ளது. தி ப்ரேக்ஃபாஸ்ட் கிளப் என்னும் வானொலி நிகழச்சியில் பங்கேற்ற போது மரிஜுவானா எனப்படும் கஞ்சா போன்ற போதை புகையிலையை புகைத்திருந்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். மரிஜுவானா பயன்படுத்தியாக கருப்பினத்தவர்களை மிக அதிக அளவில் கைது செய்யப்படுகின்றனர். கலிபோர்னியா மாகாண செனட்டராக இருந்த போது மரிஜுவானா பயன்பாட்டை சட்டரீதியாக அங்கீகரிப்பதை மறுத்துவிட்டார். அதே போல், அமெரிக்க வரலாற்றில் கறுப்பர்களை அதிகளவில் பாதித்த மரண தண்டனையை கமலா ஹாரிஸ் பலமுறை ஆதரித்து பேசியுள்ளார். எந்த ஒரு முற்போக்காளரும் மரண தண்டனையை ஆதரிக்கவே மாட்டார்கள். இரண்டு முறைக்கு மேல் சிறிய குற்றங்களை செய்தால் கூட ஆயுள் தண்டனை வழங்கும் சட்டம் கலிபோர்னியா…
இட ஒதுக்கீட்டு பாதுகாப்பு மாநாடு
பல்வேறு தேசிய இனங்கள் உள்ளடக்கிய இன்றைய இந்திய நிலப்பரப்பை ஆங்கிலேயன் இந்தியா என்ற பெயரைக்கொடுத்து அடிமைப்படுத்தி ஆட்சி நடத்திய நேரம் ஆங்கில…